பிஎஸ்என்எல் கேபிள் ஒயர் திருட்டு
சங்ககிரி, ஜன. 8: தேவூரிலிருந்து காவேரிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள சரபங்கா நதி பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த 20 மீட்டர் அளவுள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கேபிள் ஒயரை அடையாளம் தெரியாத நபர்கள் வ
சங்ககிரி, ஜன. 8: தேவூரிலிருந்து காவேரிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள சரபங்கா நதி பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த 20 மீட்டர் அளவுள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கேபிள் ஒயரை அடையாளம் தெரியாத நபர்கள் வியாழக்கிழமை அறுத்து எடுத்து சென்றுள்ளனர்.
இது குறித்து அந்நிறுவனத்தின் இளநிலை பொறியாளர் என். வசுமதி தேவூர் போலீஸில் சனிக்கிழமை புகார் செய்துள்ளார். போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.