மே 29-இல் கட்டடத் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
கட்டடத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வருகிற மே 29 -ஆம் தேதி தொழிலாளர் நல அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என ஏஐடியூசி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டடத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வருகிற மே 29 -ஆம் தேதி தொழிலாளர் நல அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என ஏஐடியூசி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின், தருமபுரி மாவட்டக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை அச்சங்கத்தின், மாவட்டத் தலைவர் மாதையன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலர் கே.ரவி, கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
இக்கூட்டத்தில், கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் ரூ.1,200கோடி நிதி இருந்தும், தொழிலாளர்களின் நலன் காக்கப்படாதது, ஆயிரக்கணக்கானோர் ஓய்வூதியம் கோரி மனு அளித்து காத்துக் கிடப்பது, விபத்து, மரணம் உள்ளிட்டவற்றுக்கு நிவாரண நிதிக்காக அலைக்கழிப்பு ஆகிவற்றுக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும். மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 29-ஆம் தேதி மாவட்டத் தொழிலாளர் நல அலுவலகம் முன் வீடு திரும்பா காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மாநிலச் செயலர் முனுசாமி, ஏஐடியூசி மாவட்டத் தலைவர் எம்.மாதேஸ்வரன், கட்டட சங்க மாவட்டப் பொதுச் செயலர் ஆர்.சுதர்ஷனன், பொருளாளர் விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.