முகப்பு
தருமபுரி

பாப்பிரெட்டிபட்டி போராட்ட தேதி மாற்றம்: டிடிவி தினகரன்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியில் புதன்கிழமை (நவ.14) நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை

Updated On : 13 நவம்பர், 2018 at 3:32 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:47 PM


தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியில் புதன்கிழமை (நவ.14) நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை (நவ.15) நடைபெறும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:- பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை தொகுதி மக்களின் கோரிக்கைகளையும், மேம்பாட்டையும் முற்றிலுமாக புறக்கணிக்கும் தமிழக அரசின் மக்கள் விரோத மனநிலையை கண்டிக்கும் வகையில், அங்கு புதன்கிழமை உண்ணாவிரத போராட்டத்துக்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு, நீதிமன்ற அனுமதியுடன் பாப்பிரெட்டிபட்டியில் வரும் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.