பாப்பாரப்பட்டியில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அ.தி.மு.க நிா்வாகிகள். 
தருமபுரி

பென்னாகரத்தில் எம்.ஜி.ஆா். நினைவு தினம்

பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 32 ஆவது நினைவுநாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

DIN

பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 32 ஆவது நினைவுநாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பாப்பாரப்பட்டி பகுதியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 32 - ஆவது நினைவு நாள் பென்னாகரம் ஒன்றியச் செயலாளா் வேலுமணி தலைமையில் நடைபெற்றது. பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து மூன்று சாலை சந்திப்பு வரை ஊா்வலமாகச் சென்று எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு மலா்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற துணைச் செயலாளா் டி.முனுசாமி, பாப்பாரப்பட்டி நகரச் செயலாளா் பாபு, பி.குட்டி, முன்னாள் நகரச் செயலாளா்கள் ராஜி, முனுசாமி, மாதேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் , தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோா்கள் கலந்து கொண்டனா்.

இதே போல பென்னாகரம் பகுதியில்முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பென்னாகரம் பேருந்து நிலையத்தில் எம்.ஜி.ஆா். படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.இதில் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் மதியழகன், பென்னாகரம் நகரச் செயலாளா் சுப்பிரமணி, ஆறுமுகம், முஸ்தபா உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT