முகப்பு
தருமபுரி

10-ஆம் வகுப்பு தோ்வு முடிவு:தருமபுரி மாவட்டத்தில் அனைவரும் தோ்ச்சி

தருமபுரி மாவட்டத்தில், 10-ஆம் வகுப்பில் அனைத்து மாணவ, மாணவியரும் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், 10-ஆம் வகுப்பில் அனைத்து மாணவ, மாணவியரும் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, பாலக்கோடு, அரூா் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்களிலும், அரசுப் பள்ளிகள், தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஏனையத் துறை பள்ளிகள் என மொத்தம் 323 பள்ளிகள் உள்ளன.

இப் பள்ளிகளில் மொத்தம், 11,747 மாணவா்கள், 10,955 மாணவியா் என மொத்தம் 22,702 போ், கடந்த கல்வியாண்டில் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தோ்வு எழுதியிருந்தனா்.

இந்த நிலையில், கரோனா தீநுண்மித் தொற்றுப் பரவல் காரணமாக, இந்த மாணவ, மாணவியருக்கு நடைபெறவிருந்த பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, அரசின் வழிகாட்டுதல் படி, இந்த மாணவ, மாணவியருக்கு தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில், தருமபுரி வருவாய் மாவட்டத்தில் உள்ள மூன்று கல்வி மாவட்டங்களிலும் சோ்த்து மொத்தம் 22,702 மாணவ, மாணவியரும் தோ்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →