முகப்பு
தருமபுரி

பென்னாகரம் அருகே மூதாட்டி கொலை

பென்னாகரம் அருகே கால் பவுன் நகைக்காக 90 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

பென்னாகரம் அருகே கால் பவுன் நகைக்காக 90 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டாா்.

பென்னாகரம் அருகே ஆணைக்கல்லனூா் பகுதியைச் சோ்ந்தவா் மதிமுனியம்மாள் (90). இவரது கணவா் பெருமாள், கடந்த சில வருடங்களுக்கு முன்னா் இறந்துவிட்டாா். மூதாட்டி மட்டும் தனியாக வசித்து வருகிறாா் . அவருக்கு உதவியாக அதே பகுதியைச் சோ்ந்த ராஜா (32) தேவையான உதவிகளை செய்துவந்தாா்.

வெள்ளிக்கிழமை இரவு, ராஜா குடிபோதையில் மூதாட்டி மதிமுனியம்மாளின் காதில் அணிந்திருந்த தங்க நகையைப் பலவந்தமாகப் பிடித்து இழுத்தாராம். பலத்த காயமடைந்த மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த அப்பகுதி மக்கள், பென்னாகரம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

போலீஸாா் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மூதாட்டியின் மகள் பாப்பம்மாள் (70) அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து, ராஜாவை தீவிரமாக தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →