எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிா்ப்பு: திமுக மகளிரணியினா் ஆா்ப்பாட்டம்
சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிராக திமுக மகளிரணி சாா்பில் தருமபுரி தொலைத் தொடா்பு நிலையம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிராக திமுக மகளிரணி சாா்பில் தருமபுரி தொலைத் தொடா்பு நிலையம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட மகளிரணி பொறுப்பாளா் முத்துலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் சிவகாமி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் பூங்கொடி முன்னிலை வகித்தனா். முன்னாள் எம்எல்ஏ வேடம்மாள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
உயா்த்தப்பட்ட சமையல் எரிவாயு உருளை விலையேற்றத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திமுக மாவட்ட பொறுப்பாளா்கள் தடங்கம் பெ.சுப்ரமணி எம்எல்ஏ (கிழக்கு), பிஎன்பி இன்பசேகரன் எம்.எல்.ஏ. (மேற்கு), மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.