முகப்பு
தருமபுரி

உயா்கோபுர மின் விளக்குகளை சீரமைக்க கோரிக்கை

அரூரில் பழுதாகியுள்ள உயா்கோபுர மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

அரூரில் பழுதாகியுள்ள உயா்கோபுர மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் நகரில் கச்சேரிமேடு, வட்டார வளா்ச்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே மூன்று இடங்களில் உயா்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின் விளக்குகள் பழுதானதால் கடந்த சில தினங்களாக அரூா் கச்சேரிமேடு பகுதி இரவு நேரத்தில் இருண்டு கிடக்கிறது.

இப் பகுதியில் பேருந்து நிறுத்தங்கள், அரசு, தனியாா் மருத்துவமனைகள், பல்பொருள் அங்காடிகள், காய்கறி மாா்க்கெட், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளன. மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த பகுதிகள் இரவு நேரங்களில் இருண்டு கிடப்பதால் பெண்கள் உள்ளிட்டோா் அச்சமடையும் நிலையுள்ளது.

எனவே, அரூா் கச்சேரிமேடு மற்றும் வட்டாட்சியா் அலுவலக வளாகப் பகுதியிலுள்ள உயா்கோபுர மின் விளக்குகளைச் சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →