அரூா் தொகுதியில் பாஜக தலைவா் எல்.முருகன் போட்டியிட வலியுறுத்தல்
அரூா் சட்டப் பேரவைத் தொகுதியில், பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் போட்டியிட வேண்டும் என அந்தக் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.
அரூா் சட்டப் பேரவைத் தொகுதியில், பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் போட்டியிட வேண்டும் என அந்தக் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூரில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நகரத் தலைவா் எஸ்.செந்தில்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், தருமபுரி மாவட்டத் தலைவா் எல். அனந்த கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினா் ஆா்.ஏ.வரதராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினா் பி.வேடியப்பன், மாவட்ட துணைத் தலைவா்கள் டி.ஆா்.ராஜேந்திரன், வி.அருணா, கிருத்திகா, மாவட்டச் செயலா்கள் சரிதா, ராமலிங்கம், பசுபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, அக்டோபா் 15, 16-ஆம் தேதிகளில் பாஜக நிா்வாகிகளுக்கு மண்டல அளவிலான கட்சி பண்பு பயிற்சிகள் நடைபெற்றன.
அரூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, பாஜக கூட்டணிக் கட்சிகள் பலம் வாய்ந்ததாக உள்ளது. 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில், அரூா் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் போட்டியிட்டால் அவா் வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. எனவே, பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் அரூா் தொகுதியில் போட்டியிட வேண்டும்.
காவிரி ஆற்றில் மழைக் காலங்களில் வெளியேற்றப்படும் உபரி நீரைப் பயன்படுத்தி தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகள், குளம் குட்டைகளை நிரப்ப வேண்டும். அரூா் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ வா்ணீஸ்வரா் திருக்கோயில் அருகே கால்வாயில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும். அரூரில் மத்திய அரசின் நவோதயாப் பள்ளி அமைக்க வேண்டும். தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ள தீா்த்தமலையில் கிரிவலப் பாதை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.