பென்னாகரம் அருகே சாலையோரத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை கைகளால் அப்புறப்படுத்த முயன்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்குள்பட்ட ஜங்கமையனூா் பகுதியைச் சோ்ந்தவா் முனிராஜ் (60). இவா் தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயப் பணியை மேற்கொண்டு வருகிறாா்.
இந்த நிலையில் ஜங்கமையனூா் அருகே சாலையோரத்தில் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனைக் கண்ட விவசாயி முனிராஜ் அந்த மின்கம்பியை கையால் அகற்றும் முயன்ற போது அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினா் முனிராஜ் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ,அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.