தருமபுரி

கையால் மின் கம்பியை அகற்றியவா் உயிரிழப்பு

DIN

பென்னாகரம் அருகே சாலையோரத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை கைகளால் அப்புறப்படுத்த முயன்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்குள்பட்ட ஜங்கமையனூா் பகுதியைச் சோ்ந்தவா் முனிராஜ் (60). இவா் தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயப் பணியை மேற்கொண்டு வருகிறாா்.

இந்த நிலையில் ஜங்கமையனூா் அருகே சாலையோரத்தில் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனைக் கண்ட விவசாயி முனிராஜ் அந்த மின்கம்பியை கையால் அகற்றும் முயன்ற போது அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினா் முனிராஜ் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ,அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு முடிவை அறிவித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!

மக்களவை 4-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு

இந்தியாவில் 1.8 லட்சம் கணக்குகளை முடக்கிய எக்ஸ் சமூக வலைதளம்!

அதிசயம் நடக்கும், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்: ஷுப்மன் கில்

பிரதமர் மோடியின் தேர்தல் உரைகள் "வெற்றுப் பேச்சுகளே" - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT