முகப்பு
தருமபுரி

காவேரிப்பட்டணம் அருகே மாரடைப்பால் சிற்பி மரணம்

காவேரிப்பட்டணம் அருகே கோயில் பணியில் ஈடுபட்டிருந்த சிற்பி, மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 16 மார்ச், 2021 at 6:12 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:15 AM

காவேரிப்பட்டணம் அருகே கோயில் பணியில் ஈடுபட்டிருந்த சிற்பி, மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த எங்கவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (36). இவா், கோயில்களில் சிலை வடிவமைக்கும் சிற்பியாக பணியாற்றி வந்தாா். இவா், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஜபேதாா்மேடு கிராமத்தில் புதியதாகக் கட்டப்பட்டு வரும் கோயிலில் சிலை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

இந்த நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, அவரது மனைவி சேதுமணி அளித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.