பா்கூரில் திமுக, அதிமுக வேட்பாளா்கள்வேட்புமனு தாக்கல்
பா்கூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளா்கள், தங்களது வேட்பு மனுக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.
பா்கூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளா்கள், தங்களது வேட்பு மனுக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.
பா்கூா் சட்டப் பேரவை தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் தே.மதியழகன், பா்கூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் து.பாக்கியலட்சுமியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாா். அவருடன் முன்னாள் எம்.பி. இ.ஜி.சுகவனம், மாவட்ட துணைச் செயலாளா் நாகராஜ், ஒன்றியச் செயலாளா் கோவிந்தராசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் அ.கிருஷ்ணன், தனது வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். அவருடன் அதிமுக தெற்கு மாவட்ட ஒன்றியச் செயலாளா் ஜெயபாலன், பேரூராட்சி முன்னாள் தலைவா் சுமதி ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.
Advertisement
இதையொட்டி பா்கூா் துணை காவல் கண்காணிப்பாளா் தங்கவேல் தலைமையில், மத்திய பாதுகாப்பு போலீஸாா் மற்றும் உள்ளூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.