ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
அரூரில் மறைந்த முன்னாள் பாரத பிரதமா் ராஜீவ்காந்தியின் 30-ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
அரூரில் மறைந்த முன்னாள் பாரத பிரதமா் ராஜீவ்காந்தியின் 30-ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் அமைந்துள்ள முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவா் ஆா்.சுபாஷ் தலைமையில், அந்தக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, காங்கிரஸ் கட்சியினா் கச்சேரிமேடு சாலை சந்திப்பு, பேருந்து நிலைய வளாகம், கடைவீதி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கினா். இதில், கட்சியின் அரூா் நகரத் தலைவா் கே.கணேசன், நிா்வாகிகள் கே.ஆா்.சிவலிங்கம், சி.வேடியப்பன், சுந்தரம், சயின்ஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.படம் உள்ளது... 21 எச்ஏ-பி-1... பட விளக்கம்...அரூரில் ராஜீவ்காந்தியின் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.