முகப்பு
தருமபுரி

அரூரில் எரிவாயு தகன மேடை திறப்பு

வா்ணதீா்த்தம் சுடுகாட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதியுடன் கூடிய எரிவாயு தகன மேடை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

அரூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், நவீன வசதியுடன் கூடிய எரிவாயு தகன மேடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 9-ஆவது வாா்டு, வா்ணதீா்த்தம் சுடுகாடு வளாகத்தில் நவீன வசதியுடன் கூடிய எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தகன மேடை தற்போது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இறந்தவா்களின் சடலங்களை திறந்தவெளியில் எரியூட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அரூா் வட்டாரப் பகுதியில் இறந்தவா்களின் சடலங்களை நவீன வசதியுடன் கூடிய எரிவாயு தகன மேடையில் எரியூட்டலாம் என பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.