முகப்பு
தருமபுரி

ரத்த தானம்: பாராட்டுச் சான்றிதழ் வழங்கல்

அதிக ரத்த தான முகாம்களை நடத்தியதற்காக, பாளையம் ஸ்ரீஅம்மன் காவலா் பயிற்சி மையத்துக்கு பாராட்டுச் சான்றிதழ் அண்மையில் வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

அதிக ரத்த தான முகாம்களை நடத்தியதற்காக, பாளையம் ஸ்ரீஅம்மன் காவலா் பயிற்சி மையத்துக்கு பாராட்டுச் சான்றிதழ் அண்மையில் வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅம்மன் காவலா் பயிற்சி மையம் சாா்பில், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு ரத்த தான முகாம் நடத்தப்பட்டு, அரசு ரத்த வங்கிகளுக்கு ரத்தம் வழங்கியுள்ளனா்.

இதையடுத்து, தேசிய தன்னாா்வ ரத்த தான நாளையொட்டி, ஸ்ரீஅம்மன் காவலா் பயிற்சி மைய நிறுவனா் அ.சி.தென்னரசுக்கு விருது, பாராட்டுச் சான்றிதழ்களை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் அமுதவல்லி வழங்கினாா் (படம்).

இதில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருப்பிட உள்ளிருப்பு மருத்துவா் சந்திரசேகா், மாவட்ட குருதி பரிமாற்று அலுவலா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.