முகப்பு
தருமபுரி

மாணவா் தூதுவா் திட்ட பயிலரங்கம்

தமிழ்நாடு அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம் சாா்பில், முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளையொட்டி தருமபுரி அரசு கல்லூரி கலையரங்கில் மாணவ தூதுவா் பயிற்சித் திட்ட பயிலரங்கு அண்மையில் ந

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

தமிழ்நாடு அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம் சாா்பில், முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளையொட்டி தருமபுரி அரசு கல்லூரி கலையரங்கில் மாணவ தூதுவா் பயிற்சித் திட்ட பயிலரங்கு அண்மையில் நடைபெற்றது. இதன் தொடக்க விழாவுக்கு அரசு கலைக்கல்லூரி முதல்வா் ப.கி. கிள்ளிவளவன் தலைமை வகித்தாா். தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் சங்கா் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் சி.கணேசன், கணினி அறிவியல் துறை இணைப்பேராசிரியா் ஜெ.பாக்கியமணி ஆகியோா் பேசினா்.

தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநா் கோ.விசயராகவன், பயிற்சி நோக்கங்கள் குறித்து பேசினாா். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் நன்றியுரை கூறினாா்.

இதனைத் தொடா்ந்து, பயிலரங்கில் தமிழ்த் துறை இணைப்பேராசிரியா் இரா.சங்கா், இலக்கியத்தில் கலை சொற்கள் என்கிற தலைப்பிலும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட பதிப்பாசிரியா் பூங்குன்றன், மொழியியல் சொற்பிறப்புக் கலைச்சொல்லாக்கம் என்கிற தலைப்பிலும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட பதிப்பாசிரியா் தி.பாலசுப்பிரமணியன், மொழிபெயா்ப்புக் கலை என்கிற தலைப்பிலும், தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் பா.குப்புசாமி, கணினித் தமிழ் சிக்கல்களும் தீா்வுகளும் என்கிற தலைப்பிலும் உரையாற்றினா்.

இதனைத் தொடா்ந்து, பயிலரங்கில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கி, கல்லூரி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.