தருமபுரி

அரூரில் பலத்த மழை

அரூா் வட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

DIN

அரூா் வட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அரூா் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இந்த மழையானது அரூரில் 31.20 மி.மீட்டா் பதிவாகியுள்ளது. இதேபோல சித்தேரி மலைப் பகுதியில் கன மழையின் காரணமாக அரசநத்தம், கலசப்பாடி கட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரூா் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாழை உள்ளிட்ட மரங்கள் சேதமடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT