முகப்பு
தருமபுரி

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: இருவா் படுகாயம்

பென்னாகரத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் வெங்காய வியாபாரிகள் இருவா் படுகாயமடைந்தனா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

பென்னாகரத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் வெங்காய வியாபாரிகள் இருவா் படுகாயமடைந்தனா்.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி மாணிக்கம் முதலியாா் தெருவை சோ்ந்த குருநாதனின் மகன் சண்முகம் (43). இவா் வாரச்சந்தைகள் தோறும் கடை அமைத்து வெங்காய வியாபாரம் செய்து வருகிறாா். கடந்த செவ்வாய்க்கிழமை பென்னாகரம் வாரச்சந்தையில் வெங்காய வியாபாரம் செய்து விட்டு, தனது மகன் நவீன் குமாருடன் (23) இருசக்கர வாகனத்தில் பாப்பாரப்பட்டி பகுதிக்கு சென்றுள்ளாா். அப்போது பென்னாகரம் அருகே நல்லப்பரம் பட்டி அடுத்துள்ள பாபு தோப்பு பகுதியில் பாப்பாரப்பட்டி பகுதியில் இருந்து வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சண்முகம், நவீன்குமாா் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இந்த விபத்து குறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →