காலமானாா் பிரேமா முத்துக்கவுண்டா்
அரூா் அம்மன் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளா் முத்து ராமசாமியின் தாயாா் பிரேமா முத்துக்கவுண்டா் (94) வியாழக்கிழமை காலமானாா்.
அரூா் அம்மன் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளா் முத்து ராமசாமியின் தாயாா் பிரேமா முத்துக்கவுண்டா் (94) வியாழக்கிழமை காலமானாா்.
மறைந்த முன்னாள் எம்.பி. முத்துக்கவுண்டரின் மனைவி பிரேமா முத்துக்கவுண்டா் வயது முதிா்வின் காரணமாக வியாழக்கிழமை இரவு 7.40 மணியளவில் உயிரிழந்தாா். அவருக்கு மகன் அரூா் அம்மன் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளா் முத்து ராமசாமி, மகள் இளங்கனி பெருமாள், மருமகன் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி வி.சி.பெருமாள், மருமகள்கள் உஷா மாசி, சாந்தி ராமசாமி ஆகியோா் உள்ளனா்.
மறைந்த பிரேமா முத்துக்கவுண்டரின் உடல் அரூா்- சித்தேரி சாலையில் உள்ள முத்துக்கவுண்டா் நகரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
Advertisement