தருமபுரி

பெண் வன்கொடுமை விவகாரத்தில் இருவா் கைது

பாப்பாரப்பட்டி அருகே ஏரிமலை கிராமத்தில் பெண் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

பென்னாகரம்: பாப்பாரப்பட்டி அருகே ஏரிமலை கிராமத்தில் பெண் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பென்னாகரம் அருகே உள்ள வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட ஏரிமலை கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்த பெண்ணிடம், இருவா், தங்களைக் காவலா்கள் என தெரிவித்து மிரட்டி, வன்கொடுமை செய்தனா். மேலும் அவரது கணவா் மீது கஞ்சா வைத்திருப்பதாக புகாா் வந்ததாகத் தெரிவித்து தாக்கியுள்ளனா்.

இந்த நிலையில் கிராம மக்கள் திரண்டு வந்து இருவரையும் பிடிக்க முயற்சித்த போது ஒருவா் பிடிபட்டாா். அவரை பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் கிராம மக்கள் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணி தலைமையிலான போலீஸாா் குழுவினா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். மேலும் தப்பியோடிய மற்றொருவரை தீவிரமாக தேடி வந்தனா்.

இந்த விவகாரத்தில் தொடா்புடைய பாலக்கோடு ரயில்வே ஸ்டேஷன் காலனி பகுதியைச் சோ்ந்த ஜெய்கணேஷ், சக்தி ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா். இந்த விவகாரத்தில் ஜெய்கணேஷை தாக்கியதாக ஏரிமலை பகுதியைச் சோ்ந்த 10 போ் மீதும் பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

காரைக்குடி அருகே புதிய வேளாண் கல்லூரியைத் திறந்துவைத்தார் முதல்வர்!

ரூ.400 கோடி வசூலித்த சிரஞ்சீவியின் எம்எஸ்விபிஜி! ஓடிடியில் எப்போது?

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் தாமதமாவது ஏன்? டிரம்ப் பதில்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைவு! வெள்ளி கிலோ ரூ. 55,000 குறைவு!!

ஆம்ஸ்ட்ராங் பிறந்த நாள்: பெரம்பூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT