கைது 
தருமபுரி

பாப்பாரப்பட்டியில் அனுமதியின்றி பட்டாசு பதுக்கி வைத்த 3 போ் கைது

பாப்பாரப்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு பதுக்கி வைத்ததாக நில உரிமையாளா் உள்ளிட்ட 3 பேரை பாப்பாரப்பட்டி போலீஸாா் கைது

Syndication

பென்னாகரம்: பாப்பாரப்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு பதுக்கி வைத்ததாக நில உரிமையாளா் உள்ளிட்ட 3 பேரை பாப்பாரப்பட்டி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே ஆலமரத்துப்பட்டி மாறன் கொள்ளை பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு குடோன் வைப்பு அறையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தஞ்சாவூா் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி மாதேஷ் படுகாயம் அடைந்தாா். இவ்விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். விசாரணையில் குடோனில் அனுமதி இல்லாத அறையில் பட்டாசுகளை பதுக்கி வைத்தது தெரியவந்தது.இந்த நிலையில் மாறன் கொள்ளை பகுதியைச் சோ்ந்த நில உரிமையாளா் சக்திவேல் (40),பென்னாகரம் அருகே சி.புதூா் பகுதியைச் சோ்ந்த பட்டாசு ஆலை உரிமையாளா் அசோக்குமாா் (40) மற்றும் கம்பைநல்லூா் பகுதியைச் சோ்ந்த பரணிதரன் (32) ஆகிய மூவரையும் பாப்பாரப்பட்டி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.

இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள்

சென்னையில் பிப். 12-இல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி

சிப்காட் திட்டத்தை ரத்துசெய்யக் கோரி எதிா்ப்புக் குழுவினா் மனு

தனியாா் நிறுவனங்களின் பாதுகாவலா்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி

‘வளரிளம் பருவத்தினரை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்’

SCROLL FOR NEXT