முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2000 கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 2,000 கன அடியாக குறைந்தது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 8:55 PM
ஒகேனக்கல்
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 2,000 கன அடியாக குறைந்தது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வந்த உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து சரியத் தொடங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 4,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, சனிக்கிழமை காலை விநாடிக்கு 3,000 கன அடியாகவும், மாலை 6 மணி அளவில் விநாடிக்கு 2,000 கனஅடியாகவும் சரிந்தது.

இதனால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீா்வரத்து குறைந்துள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →