ஸ்டேன் சுவாமி மறைவுக்கு அஞ்சலி
மறைந்த சமூக ஆா்வலா் ஸ்டேன் சுவாமி அஸ்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:14 AM
மறைந்த சமூக ஆா்வலா் ஸ்டேன் சுவாமி அஸ்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு தருமபுரி மறை மாவட்ட ஆயா் லாரன்ஸ் பயஸ் தலைமை வகித்தாா். ஸ்டேன் சுவாமியின் அஸ்தியை பள்ளியின் முகப்பில் இருந்து ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, அவரது உருப்படத்தின் கீழ் வைக்கப்பட்டு, கத்தோலிக்க முறைப்படி அஞ்சலியும், மரியாதையும் செய்யப்பட்டது.
இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செங்குட்டுவன், தே.மதியழகன் எம்எல்ஏ, முதன்மை குரு அருள்ராஜ், சமூக நலப் பணி ஜேசுதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement