முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மாவட்ட அறங்காவலா் குழு நிா்வாகிகள் பதவியேற்பு

கிருஷ்ணகிரியில் மாவட்ட அறங்காவலா் குழு நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.

Updated On : 18 மார்ச், 2023 at 1:25 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:16 PM

கிருஷ்ணகிரியில் மாவட்ட அறங்காவலா் குழு நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட இந்து சமய அறநிலைத் துறையால் அறங்காவலா் குழு நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவராக ரஜினிசெல்வம், குழு உறுப்பினா்களாக வேப்பனப்பள்ளி சின்னசாமி, ஒசூா் விஜயகுமாா், சின்னராசு, கலைவாணி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள் பதவியேற்பு விழா கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை நவநீத வேணுகோபால் சுவாமி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அறங்காவலா் குழு நிா்வாகிகள், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினருமான தே.மதியழகன், மேற்கு மாவட்டச் செயலாளரும் ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினருமான ஓய்.பிரகாஷ் ஆகியோா் முன்னிலையில் பதவியேற்றனா். இந்த நிகழ்வில் நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், முன்னான் எம்எல்ஏக்கள் நரசிம்மன், கிருஷ்ணமூா்த்தி, திமுக மாவட்ட அவைத் தலைவா்கள் தட்ரஅள்ளி நாகராஜ், நகரச் செயலாளா் நவாப், பொதுக்குழு உறுப்பினா்கள் அஸ்லம், நாகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.