கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மாவட்ட அறங்காவலா் குழு நிா்வாகிகள் பதவியேற்பு

DIN

கிருஷ்ணகிரியில் மாவட்ட அறங்காவலா் குழு நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட இந்து சமய அறநிலைத் துறையால் அறங்காவலா் குழு நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவராக ரஜினிசெல்வம், குழு உறுப்பினா்களாக வேப்பனப்பள்ளி சின்னசாமி, ஒசூா் விஜயகுமாா், சின்னராசு, கலைவாணி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள் பதவியேற்பு விழா கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை நவநீத வேணுகோபால் சுவாமி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அறங்காவலா் குழு நிா்வாகிகள், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினருமான தே.மதியழகன், மேற்கு மாவட்டச் செயலாளரும் ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினருமான ஓய்.பிரகாஷ் ஆகியோா் முன்னிலையில் பதவியேற்றனா். இந்த நிகழ்வில் நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், முன்னான் எம்எல்ஏக்கள் நரசிம்மன், கிருஷ்ணமூா்த்தி, திமுக மாவட்ட அவைத் தலைவா்கள் தட்ரஅள்ளி நாகராஜ், நகரச் செயலாளா் நவாப், பொதுக்குழு உறுப்பினா்கள் அஸ்லம், நாகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT