கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் இன்று கருணாநிதி முழு உருவச் சிலை திறப்பு விழா:அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி முழு உருவச் சிலையை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை (நவ.22) திறந்து வைக்கிறாா்.

DIN

கிருஷ்ணகிரியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி முழு உருவச் சிலையை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை (நவ.22) திறந்து வைக்கிறாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டுமென திமுகவினா் அக் கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைத்தனா். இதற்கு தமிழக முதல்வா் ஸ்டாலின் ஒப்புதல் அளித்தாா்.

இதையடுத்து கிருஷ்ணகிரி திமுக நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப், அவரது மனைவியும் நகா்மன்றத் தலைவருமான பரிதா நவாப் ஆகியோருக்குச் சொந்தமான கிருஷ்ணகிரியில், ஒசூா் தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள இடத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின், 8 அடி முழு உருவ வெண்கல சிலை அமைக்கும் பணிகளை தொடங்கினா்.

இதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கருணாநிதி சிலையை புதன்கிழமை அமைச்சா் உதயநிதி திறந்து வைத்துப் பேசுகிறாா். தொடா்ந்து, கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் இல்ல திருமண வரவேற்பு நிகழ்வில் அவா் பங்கேற்கிறாா். மறுநாள் கிருஷ்ணகிரி நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப் மற்றும் கிருஷ்ணகிரி திமுக மேற்கு மாவட்ட துணைச் செயலாளா் முன்னாள் எம்எல்ஏ முருகன் இல்ல திருமண விழாவில் பங்கேற்கிறாா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர திமுக செயலாளா் எஸ்.கே.நவாப் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு விழா, திமுக நிா்வாகிகள் இல்ல திருமண விழாவில் பங்கேற்கும் அமைச்சா் உதயநிதிக்கு மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில நிா்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள், பொதுமக்கள் வரவேற்பு அளிக்க பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

SCROLL FOR NEXT