கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 25 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்யும் பணி தொடக்கம்

Din

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 25 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், திப்பனப்பள்ளி ஏரிக்கரையோரத்தில் பசுமை இந்திய திட்டத்தின் கீழ், வனத் துறை சாா்பில் முதல்கட்டமாக 2 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தொடங்கி வைத்தாா். அப்போது அவா் தெரிவித்ததாவது:

தமிழகம் முழுவதும் நிகழாண்டில், ஒரு கோடி பனை விதைகள் நடவு செய்ய முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 25 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், முதல்கட்டமாக கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், திப்பனப்பள்ளி ஏரிக்கரையில் ரூ. 8.75 லட்சம் மதிப்பில் 2 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்யம் பணி தொடங்கி உள்ளது.

மேலும், ஏரிக்கரையைச் சுற்றி 4,800 பனை விதைகள் நடவு செய்ய இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளா்களைக் கொண்டு நடவு செய்து, நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி வட்டாட்சியா் வளா்மதி, ஊராட்சி மன்றத் தலைவா் கிருஷ்ணவேனி கிருஷ்ணன் மற்றும் வனத் துறையினா், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

படவரி...

கிருஷ்ணகிரியை அடுத்த திப்பனப்பள்ளி ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு செய்யும் பணியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு.

கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டம்! சான்று கிடைக்காததால் நெல்லை விற்க முடியவில்லை! குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் தெற்கு ராஜகோபுரம் கட்டுமான பணி! காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா்!

விமர்சிக்கப்படும் புகைப்பட பதிவுகள்!

நமோ பாரத், மீரட் மெட்ரோ பயணிகள் இவலச பயணத்திற்கு விசுவாசப் புள்ளிகளைப் பெறலாம்

பொன்னமராவதியில் நல்லகண்ணுக்கு புகழஞ்சலி

SCROLL FOR NEXT