பெண் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை
ராசிபுரம் நகராட்சியில் பணிபுரியும் பெண் துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை மேல் அங்கி வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
ராசிபுரம் நகராட்சியில் பணிபுரியும் பெண் துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை மேல் அங்கி வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
ராசிபுரம் இன்னர்வீல் கிளப் சார்பில் 54 துப்புரவு பெண் பணியாளர்களுக்கு இந்த மேல் அங்கிகள் வழங்கப்பட்டன. மாவட்ட இன்னர்வீல் கிளப் தலைவர் ராஜ்வி, ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்று இவற்றை வழங்கினர்.
நிகழ்ச்சியில் நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.வெங்கடாசலம், ஆணையர் (பொறுப்பு) பரமசிவம், சுகாதார அலுவலர் ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.