கொங்குநாடு மெட்ரிக் பள்ளி நூறு சதம் தேர்ச்சி
நாமக்கல் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நூறு சதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
நாமக்கல் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நூறு சதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இந்தப் பள்ளி மாணவர் பூவரசன், 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், 1157 மதிப்பெண்களுடன் மாணவர் சௌந்தர் இரண்டாமிடத்தையும், சத்யபிரியா என்ற மாணவி 1152 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர்.
அதோடு, தேர்வு எழுதிய 84 மாணவர்களில் 13 பேர் 1100-க்கு மேலும், 46 பேர் 1000-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
Advertisement
Advertisement
தவிர, மாணவர் பூவரசன் வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்திலும், செüந்தர், கவிதா ஆகியோர் கணித பாடத்திலும் 200-க்கு 200 மதிபெண்கள் பெற்றுள்ளனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவர்களை, மாவட்ட ஆட்சியர் டி.ஜகந்நாதன், முதன்மைக் கல்வி அலுவலர் வை.குமார் ஆகியோர் பாராட்டினர்.
பள்ளியின் கௌரவ ஆலோசகர் ராஜன், இயக்குநர் ராஜேந்திரன், செயலர் சிங்காரவேலு, தலைவர் ராஜா, பொருளாளர் ராஜராஜன், முதல்வர் சகுந்தலா மகாலிங்கம் ஆகியோர் மாணவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.