தில்லி முதல்வர் ரேகா குப்தாவின் நாற்காலி வைரலாவது ஏன்? என்ன ஸ்பெஷல்?
தில்லி முதல்வர் ரேகா குப்தாவின் நாற்காலி வைரலாவது பற்றி..
தில்லி முதல்வர் ரேகா குப்தாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிக்கப்பட்டிருக்கும் ஒரே ஒரு புகைப்படம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது. காரணம், அவர் அமர்ந்திருக்கும் நாற்காலிதான்.
தில்லி முதல்வராக இருந்த கேஜரிவால் ரூ.33 கோடி பங்களாவில் இருந்ததாக பாஜக குற்றம்சாட்டியிருந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் இன்று தில்லி முதல்வரின் நாற்காலி பற்றி கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.