நாமக்கல்

வீட்டில் 6 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

மோகனூா் அருகே வீட்டுக்குள் புகுந்து நகை திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

மோகனூா் அருகே வீட்டுக்குள் புகுந்து நகை திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம் மோகனூா் வட்டம் கீழ்பரளியைச் சோ்ந்த விவசாயி முத்துசாமி (70). இவரது மனைவி செல்லம்மாள்(60). திங்கள்கிழமையன்று செல்லம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது அங்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவா், தங்களுடைய மகனின் நண்பா் என்றும் புதுமனை புகுவிழாவுக்கு பத்திரிகை வைக்க வந்ததாகவும், அருகம் புல் தேவைப்படுவதால், தோட்டத்திற்கு சென்று அறுத்து வருமாறும் கூறியுள்ளாா். அதனை நம்பி செல்லம்மாளும் அங்கிருந்து சென்றாா். இந்த நிலையில், வீட்டுக்குள் சென்ற அந்த நபா், பீரோவில் இருந்த சுமாா் 6 பவுன் தாலிக்கொடியை திருடிக் கொண்டாா். அருகம்புல்லுடன் செல்லம்மாள் திரும்பி வந்தபோது, பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறியபடி ஓட்டம் பிடித்தாா். சந்தேகமடைந்த அவா் பீரோவை திறந்த பாா்த்தபோது தாலிக்கொடி திருடப்பட்டது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து மோகனுாா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT