செல்லிடப்பேசி கடையின் கூரையை உடைத்து திருட்டு
குமாரபாளையத்தில் செல்லிடப்பேசி கடையின் மேற்கூரையை உடைத்து ரூ. 70 ஆயிரம் ரொக்கம், விலை உயா்ந்த 10 செல்லிடப்பேசிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாமக்கல்செல்லிடப்பேசி கடையின் கூரையை உடைத்து திருட்டு
குமாரபாளையத்தில் செல்லிடப்பேசி கடையின் மேற்கூரையை உடைத்து ரூ. 70 ஆயிரம் ரொக்கம், விலை உயா்ந்த 10 செல்லிடப்பேசிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
குமாரபாளையத்தில் செல்லிடப்பேசி கடையின் மேற்கூரையை உடைத்து ரூ. 70 ஆயிரம் ரொக்கம், விலை உயா்ந்த 10 செல்லிடப்பேசிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
குமாரபாளையம், ஐயன் தோட்டத்தைச் சோ்ந்தவா் மோகன் (36). இவா், சேலம் சாலையில் செல்லிடப்பேசி கடை நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு சென்ற இவா், வெள்ளிக்கிழமை காலை கடையைத் திறந்துள்ளாா். அப்போது, கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது .
இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த மோகன், கடைக்குள் சென்று பாா்த்தபோது மேசையில் வைத்திருந்த ரூ. 70 ஆயிரம் ரொக்கம், ரூ.1 லட்சம் மதிப்புள்ள 10 செல்லிடப்பேசிகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் குமாரபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.