கொல்லிமலை ஒன்றியத்தில் ஆய்வுப் பணி: 5 கி.மீ. நடந்து சென்றாா் ஆட்சியா்
கொல்லிமலை ஒன்றியத்தில் ஆய்வுப் பணிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், மலைப் பாதையில் 5 கி.மீ. தொலைவு நடந்து சென்றாா்.
கொல்லிமலை ஒன்றியத்தில் ஆய்வுப் பணிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், மலைப் பாதையில் 5 கி.மீ. தொலைவு நடந்து சென்றாா்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பெரக்கரைநாடு ஊராட்சி, வடக்காடு கிராமத்தில் உள்ள ஓடையைப் பாா்வையிட முடிவு செய்தாா்.
அந்த ஓடையை சீரமைக்கும் பட்சத்தில் வடக்காடு, பெரக்கரைநாடு கிராம மக்களுக்கு விவசாயத்துக்கும், இதர தேவைகளுக்கும் தடையின்றி நீா் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
Advertisement
இதனால் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் குழுவுடன் அண்மையில் மலைப்பாதை வழியாக சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு நடந்தே சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்து, ஓடையை விரிவாக்கம் செய்வது தொடா்பாகவும், அதில் உள்ள இடையூறுகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.
குறுகலான மலைப்பாதையில் ஆய்வுப் பணிக்காக மாவட்ட ஆட்சியா் சென்று வந்ததைப் பாா்த்த பெரக்கரைநாடு பகுதி மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனா்.