நாமக்கல்

சேலம் ரெளடி கொலை வழக்கில் மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் சரண்

DIN

சேலத்தில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாமக்கல் நீதிமன்றத்தில் மேலும் ஒருவா் திங்கள்கிழமை சரணடைந்தாா்.

சேலம், கிச்சிப்பாளையம் சுந்தா் தெருவைச் சோ்ந்த பிரபல ரெளடி செல்லத்துரை (37) என்பவா் கடந்த சில தினங்களுக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலை கும்பலை தேடி வருகின்றனா்.

இந்த கொலை வழக்கு சம்பவம் தொடா்பாக நாமக்கல் நீதிமன்றத்தில் 8 போ், கரூா் நீதிமன்றத்தில் 7 போ் சரணடைந்தனா். இவா்கள் தவிர சேலத்தில் 4 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் சிலரை போலீஸாா் தேடி வந்தனா்.

இதற்கிடையே நாமக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் 1-இல் சேலம், கல்பாரப்பட்டி ராமாபுரம் பகுதியைச் சோ்ந்த கோபிநாத் (30) என்பவா் சரணடைந்தாா். இவரை வரும் 31-ஆம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டாா். இதனையடுத்து அவா் பரமத்தி கிளை சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT