பூவன்பழம் புட்டு
நெய்யில் நட்ஸ்களை வறுத்து எடுக்கவும். நெய்யில் ரவையைப் போட்டுக் கிளறி எடுக்கவும்.
கே.நாகலட்சுமி
தேவையான பொருள்கள்:
பூவன் பழம்- 2
வெள்ளை ரவை- 1 கிண்ணம்
நாட்டுச் சர்க்கரை- 3/4 கிண்ணம்
நெய்- கால் கிண்ணம்
ஏலம்- 4
முந்திரி, பாதாம்- தலா 10
தேங்காய்த் துருவல்- கால் கிண்ணம்
செய்முறை:
நெய்யில் நட்ஸ்களை வறுத்து எடுக்கவும். நெய்யில் ரவையைப் போட்டுக் கிளறி எடுக்கவும். சுமாராக வறுத்து எடுத்து அதோடு வாழைப்பழத்தைக் கிள்ளிப் போட்டு நாட்டுச் சர்க்கரை, தேங்காய்த் துருவல், நட்ஸ், ஏலத்தூள் சேர்த்துப் பிசையவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். வாழை இலையை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதில் இந்தக் கலவையை வைத்து மூடி, ஆவியில் 5 நிமிடங்கள் வேகவிடவும்.