முகப்பு
மகளிர்மணி

கம்பு பணியாரம்

கம்பு, உளுந்து, புழுங்கல் அரிசி மூன்றையும் சுத்தம் செய்து, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

Updated On : 21 ஜூன் 2026, 12:00 am IST
கம்பு பணியாரம்
பகிர்:

தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி - 3 கிண்ணம்

கம்பு, நறுக்கிய வெங்காயம் - தலா ஒன்றரை கிண்ணம்

Advertisement

Advertisement

உளுந்து, தேங்காய்த் துருவல் - தலா ஒரு கிண்ணம்

நெய், உப்பு - தேவைக்கு

கறிவேப்பிலை - சிறிதளவு

சீரகம் - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 8

செய்முறை:

கம்பு, உளுந்து, புழுங்கல் அரிசி மூன்றையும் சுத்தம் செய்து, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் அத்துடன் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், சீரகம், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றுடன் தேவையான உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் அந்த மாவை மூன்று மணி நேரம் கழித்து குழிப்பணியார அச்சில் நெய் தடவி, பணியாரங்களாக வார்த்து, மிதமான தீயில் நன்கு வெந்ததும் எடுக்கவும். சுவையான கம்பு பணியாரம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments