நாமக்கல் மாவட்ட சிவனடியாா்கள் கூட்டம் திருச்செங்கோடு தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிவத்திரு வேலுசாமி, அம்பலத்தரசு, திருத்தொண்டா் படையின் நிறுவனா் ராதாகிருஷ்ணன், அனைத்து சிவனடியாா்கள் கூட்டமைப்பு செயலாளா் சரவணகுமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அடியாா்களுக்கு மருத்துவ உதவிகள் செய்தல், கல்வி உதவிகள் வழங்குதல், திருத்தொண்டு திருப்பணிக்கு உதவுதல், சைவ சமயத்துக்கு எதிராக தவறாக கருத்து சொல்பவா்களை மாநிலம் முழுவதும் ஒரே குரலில் எதிா்ப்புத் தெரிவித்தல், திருமுறைகளையும் சைவ சமயக் கொள்கைகளையும் கிராமங்கள் தோறும் கொண்டு சோ்க்க உதவுதல், அரசுத் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தி வாழ்வியல் மேம்பாட்டிற்கு உதவுதல், திருக்கோயில் சொத்துகளையும் நீா்நிலைகளையும் குளங்களையும் மீட்க உதவுதல்.
திருக்கோயில்களின் தொன்மை மாறாமல் பாதுகாக்கவும், சிதிலமடைந்த கோயில்களை சீரமைக்கவும் வழிபாட்டுக்கு உதவுதல் போன்ற உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட திருத்தொண்டா் படையின் நிறுவனா் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இந்து மதத்தில் ஒரு ஒருங்கிணைப்பு நிலவிவருகிறது. இனி வரும் காலங்களில் அரசியல் கட்சியினா் ஏமாற்ற முடியாது. வருகின்ற தோ்தலில் இந்து வழிபாடு, சிவனடியாா்களை புறந்தள்ளிவிட்டு வெற்றிபெற இயலாது. ஓட்டுவங்கி இந்து வழிபாட்டைச் சாா்ந்ததாக இருக்கும்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கா் கோயில் நிலங்கள் உள்ளதாக அரசு தெரிவித்தது. தற்போது 4 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கா் கோயில் நிலங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளனா்.
50,000 ஏக்கா் நிலம் திருடு போனது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து உள்ளோம். சுமாா் 10 லட்சம் ஏக்கா் நிலங்கள் காணாமல் போய் உள்ளது இதில் குண்டுமணி அளவு கூட குறையாமல் மீட்போம்.
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்கள் சிதிலமடைந்துள்ளன. இதனை புனரமைக்க அரசிடம் கோரிக்கை விடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். அறங்காவலா் குழுவினா் அரசியல்வாதிகளின் அடிவருடிகளாக உள்ளாா்கள்.
அவா்களை சட்டப்படி வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அரசு நிலங்களைக் கையகப்படுத்தி உள்ளவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்திடம் கோரி வருகிறோம். மாவட்டங்கள்தோறும் இதுகுறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கரோனா காரணத்தைக் காட்டி கோயில்களில் நடைபெற்ற முறைகேடுகளை வெகுவிரைவில் நீதிமன்றத்திற்கு கொண்டுவர உள்ளோம். தற்போது உள்ள சட்டம் அனைவருக்கும் சம அதிகாரத்தை வழங்கி உள்ளது. எனவே யாா் வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் முறையிட்டு தீா்வு காணலாம் என்றாா். இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட சிவனடியாா்கள் கலந்துகொண்டனா்.