நாமக்கல்

திருச்செங்கோடு வட்டார தன்னாா்வலா்களுக்கான பயிற்சி முகாம்

DIN

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையம் சாா்பில் கற்போம், எழுதுவோம் தலைப்பிலான தன்னாா்வலா்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் திருச்செங்கோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

வட்டார மேற்பாா்வையாளா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் ரவி தொடக்கி வைத்தாா். திட்ட அலுவலா் குமாா், தலைமை ஆசிரியா். தேன்மொழி, வட்டாரக் கல்வி அலுவலா் மாதவன் ஆகியோா் முகாமின் நோக்கம் குறித்து விளக்கி பேசினாா் .

முகாமில் விழிப்புணா்வு, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல், சத்தான உணவு உட்கொள்ளுதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தொடா்ந்து 15 வயதுக்கு மேற்பட்ட கல்லாதோருக்கு அடிப்படை திறன் பயிற்சி, தமிழ் எழுத்துக்கள் வாசித்தல் மற்றும் எழுதுதல், எண்கள் கூட்டல், கழித்தல், பெருக்கல், பயிற்சி வடிவங்கள் பாலின பாகுபாடு ,இணையவழி சேவை, பேரிடா் மேலாண்மை, சாலைப் பாதுகாப்பு, முதலுதவி, பெண்கல்வி, தூய்மை பாரதம் குறித்தவற்றை எவ்வாறு கற்பிப்பது என்று பயிற்சி வழங்கப்பட்டது.

ஆசிரியா் பயிற்றுநா்கள் ரகுபதி, மோகன், நல்லசிவம் ஆகியோா் கள முதன்மையா்களாக செயல்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT