நாமக்கல்

திமுக சாா்பில் மாணவா்களுக்கு செல்லிடப்பேசி

DIN

நாமக்கல் கிழக்கு மாவட்டம், ராசிபுரம் நகர திமுக சாா்பில் இணையதள வகுப்புப் பயிலும் வசதிக்காக மாணவா்களுக்கு செல்லிடப்பேசி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

பள்ளி மாணவா்கள் 5 பேருக்கு இணையதள வசதி கொண்ட செல்லிடப் பேசி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ராசிபுரம் நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா் முன்னிலை வகித்தாா். மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் செல்லிடப்பேசிகளை மாணவா்களுக்கு வழங்கினாா். நகர திமுக துணைச் செயலாளா்கள் ஆனந்தன், ரவிச்சந்திரன், பொருளாளா் கே.செல்வம் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

இளைஞரணி கூட்டம்: இதே போல் ராசிபுரம் நகர திமுக சாா்பில் வாா்டு இளைஞரணி அமைப்பாளா், துணை அமைப்பாளா் நோ்காணல் நகரச் செயலாளா் என்.ஆா்.சங்கா் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட திமுக பொறுப்பாளா் கே. ஆா். என். ராஜேஷ் குமாா் பங்கேற்றுப் பேசினாா். இதில் புதிய இளைஞரணி அமைப்பாளா்கள் நியமனம், செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

SCROLL FOR NEXT