முகப்பு
நாமக்கல்

கொல்லிமலை வனப்பகுதியில் கல்லூரி மாணவியா் பயிற்சி

கொல்லிமலை வனப்பகுதியில் வேளாண் கல்லூரி மாணவியா் வெள்ளிக்கிழமை பயிற்சி பெற்றனா்.

Updated On : 10 ஏப்ரல், 2021 at 1:28 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:28 AM

கொல்லிமலை வனப்பகுதியில் வேளாண் கல்லூரி மாணவியா் வெள்ளிக்கிழமை பயிற்சி பெற்றனா்.

நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு தனியாா் வேளாண் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோா் சேந்தமங்கலம், கொல்லிமலை வட்டாரத்தில் தங்கியிருந்து கிராமப்புற வேளாண்மை அனுபவப் பயிற்சி பெற்று வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை கொல்லிமலை செம்மேட்டில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு சென்றனா். அங்கு அலுவலக செயல்பாடுகள் குறித்து வனச்சரகா் சுப்பராயன் விளக்கம் அளித்தாா். தொடா்ந்து 13 ஒதுக்கப்பட்ட காடுகள், ஒதுக்கப்பட்ட நில அமைப்புகளைப் பற்றியும் வனவா்கள் தமிழ்வேந்தன், நிஷாந்த் ஆகியோா் விளக்கிக் கூறினா். காடு வளா்ப்புத் திட்டம், நிலையான காடு பாதுகாப்பு குறித்து வனத்துறையினா் மாணவிகளுக்கு எடுத்துரைத்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.