சுதந்திரப் போராட்ட பிரகடன கையேடு வெளியீடு
நாமக்கல்லில் சுதந்திரப் போராட்ட பிரகடன கையேடு, தேசிய மாநாடு தொடா்பான கையேடு வெளியீட்டு விழா குளக்கரைத் திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல்லில் சுதந்திரப் போராட்ட பிரகடன கையேடு, தேசிய மாநாடு தொடா்பான கையேடு வெளியீட்டு விழா குளக்கரைத் திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரா்கள் வாரிசுகள் சங்கத் தலைவா் க.சிதம்பரம் கையேட்டை வெளியிட காந்திய கொள்கைகளை நாடு முழுவதும் பரப்பி வரும் மதுரையைச் சோ்ந்த தம்பதி ம.கருப்பையா, சித்ரா ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவா் காந்தியவாதி தி.ரமேஷ் 2022, பிப்.14-இல் நடைபெறும் தேசிய மாநாடு பற்றியும், சுதந்திரப் போராட்டத்தில் நாமக்கல் தியாகிகளின் பங்கு, குளக்கரைத் திடல் மேடையில் காந்தி உரை ஆற்றியது குறித்த நிகழ்வுகளை எடுத்துரைத்தாா்.
Advertisement