வட்டாட்சியா் அலுவலக ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி
சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:35 AM
சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கரோனா தடுப்பூசி 1.20 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் மூலம் தொழிலாளா்களுக்கும், முதியோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கரோனா இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவிஷீல்டு தடுப்பூசியை வட்டாட்சியா் சுரேஷ் உள்பட 20-க்கும் மேற்பட்ட அலுவலா்கள், ஊழியா்கள் செலுத்திக் கொண்டனா்.
Advertisement