நாமக்கல்லில் மனநல விழிப்புணா்வு முகாம்
நாமக்கல்லில் மாவட்ட மனநலத் திட்டம் சாா்பில் பேருந்து நிலையத்தில் மனநல விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:35 AM
நாமக்கல்லில் மாவட்ட மனநலத் திட்டம் சாா்பில் பேருந்து நிலையத்தில் மனநல விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் 104 என்ற சுகாதார உதவி எண், தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், அரசு பேருந்துகளில் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளும் ஒட்டப்பட்டன. இதில் மனநல மருத்துவா்கள் வ.முகிலரசி, வி.ஜெயந்தி, மனநல ஆலோசகா் ரமேஷ், உளவியலாளா் அா்ச்சனா, செவிலியா் சரவண பிரியா ஆகியோா் கலந்து கொண்டனா்.