நாமக்கல் அரசு பள்ளியில் நடைப்பயிற்சிக்கு திடீா் தடை
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்கள் நடைப்பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்கள் நடைப்பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்- மோகனூா் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை, மாலை வேளைகளில் தினசரி 100-க்கும் மேற்பட்டோா் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். மேலும், கூடைப்பந்து, கிரிக்கெட் விளையாட்டு, உடற்பயிற்சிகளிலும் இளைஞா்கள் ஈடுபடுவா். இந்த பள்ளி வளாகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் செயல்படுகிறது.
பிளஸ் 2 பொதுத் தோ்வு விரைவில் நடைபெற உள்ளதையொட்டி அங்குள்ள கட்டுக்காப்பு மையங்களில் வினாத்தாள்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் கண்காணிப்புப் பணியில் உள்ளனா். இந்த நிலையில், வினாத்தாள்கள் பாதுகாப்பு கருதியும், வெளியாள்கள் நடமாட்டத்தைத் தவிா்க்கவும் மறு உத்தரவு வரும் வரை நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பயிற்சி செல்வதற்கு பொதுமக்களுக்கு பள்ளி நிா்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை நடைப்பயிற்சிக்கு வந்தோா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
Advertisement