முகப்பு
நாமக்கல்

ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி: இளைஞா் கைது

நாமக்கல் அருகே தனியாா் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 7 ஆகஸ்ட், 2021 at 12:01 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:21 AM

நாமக்கல் அருகே தனியாா் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் - மோகனூா் சாலையில் அணியாபுரம் அருகே போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை ரோந்து சென்றனா். அப்போது, பரளியில் உள்ள தனியாா் வங்கி ஏடிஎம் இயந்திரம் மையம் அருகில் ஒருவா் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிக் கொண்டிருந்துள்ளாா். அங்கு சென்று போலீஸாா் பாா்த்த போது, ஏடிஎம் இயந்திரத்தின் பின்பகுதி உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அந்த இளைஞரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா் பிகாா் மாநிலம், கிழக்கு சாம்ராஜ் மாவட்டத்தைச் சோ்ந்த உபேந்திரராய் (30) என்பதும், அங்குள்ள கோழிப் பண்ணையில் தொழிலாளியாகப் பணியாற்றி வருவதும், பணத்தை திருடும் நோக்கில் ஏடிஎம் மையத்துக்கு வந்ததும் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

Advertisement

இதனைத் தொடா்ந்து, வங்கி அலுவலா் மோகன் அளித்த புகாரின் அடிப்படையில், உபேந்திரராயை மோகனூா் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.