பாராட்டுகளைப் பெறும் முத்துக்குமார்!
நடிகர் முத்துக்குமார் கதாபாத்திரம் ரசிகர்களை ஈர்த்துள்ளது...
தாய் கிழவி திரைப்படத்திற்காக நடிகர் முத்துக்குமார் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் பிரதான பாத்திரத்தில் நடித்த தாய் கிழவி திரைப்படம் கடந்த பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
அசத்தலான வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்க வெளியீட்டிலேயே ரூ. 80 கோடி வரை வசூலித்து இந்தாண்டின் பெரிய வெற்றிப்படமானது. இந்த வெற்றியால் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கும் நல்ல லாபகரமான படமாகவே தாய்கிழவி அமைந்துள்ளது.
Advertisement
மேலும், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி தென்னிந்தியளவில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், தாய் கிழவி திரைப்படத்தில் நடிகர் முத்துக்குமார் நடித்த ஜவஹர்லால் நேரு கதாபாத்திரம் பலரையும் கவர்ந்திருக்கிறது.
ராதிகாவின் மருமகனான இவர் மனைவியைத் தாய்வீட்டுக்கு அனுப்பிட்டு நகை கேட்பதும், சொத்து வருவதைத் தெரிந்துகொண்டு ராதிகாவுக்காக நாடகமாடுவதும் என ரசிகர்களைப் பல காட்சிகளில் சிரிக்க வைத்திருப்பார். தற்போது, ஓடிடி வெளியீட்டுக்குப் பின் சமூக வலைதளங்களில் முத்துக்குமாருக்கு பாராட்டுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது.