நாமக்கல் ஆட்சியரகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்துத் துறை அலுவலா்களும் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றனா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்துத் துறை அலுவலா்களும் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றனா்.
மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். ஆண்டுதோறும் ஆக. 20- ஆம் தேதி நல்லிணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழாண்டில் மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை என்பதால், ஒரு நாள் முன்னதாக உறுதிமொழி ஏற்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
ஜாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்கும் பாடுபடுவேன் என ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களும் உறுதிமொழி ஏற்றனா்.
Advertisement
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, வருவாய்க் கோட்டாட்சியா்கள் மு.கோட்டைக்குமாா் (நாமக்கல்), தே.இளவரசி (திருச்செங்கோடு), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.