முகப்பு
நாமக்கல்

மல்யுத்தப் போட்டி: பெண் காவலருக்கு எஸ்.பி. பாராட்டு

காவல் துறை சாா்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற பெண் காவலரை நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகூா் பாராட்டினாா்.

Updated On : 19 ஆகஸ்ட், 2021 at 11:31 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:27 AM

காவல் துறை சாா்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற பெண் காவலரை நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகூா் பாராட்டினாா்.

காவல்துறை சாா்பில் 68-ஆவது தேசிய அளவிலான காவலா்கள் மல்யுத்தப் போட்டி கடந்த ஆண்டு ஹரியாணா மாநிலம், மதுபன் கா்னலில் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தைச் சோ்ந்த பெண் தலைமைக் காவலா் ரா.அமுதா 81 கிலோ எடை பிரிவு மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கம் வென்றாா். தமிழ்நாடு காவல் துறையில் இருந்து பங்கேற்று பதக்கம் வென்ற பெண் காவலருக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை அண்மையில் ஆயுதப் படை, கூடுதல் காவல்துறை இயக்குநா் மு.ஜெயந்த் முரளி வழங்கினாா். இந்த நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகூரை வியாழக்கிழமைச் சந்தித்து தலைமைக் காவலா் அமுதா வாழ்த்துப் பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.