அரசுப் பள்ளி மாணவருக்கு கரோனா தொற்று
ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் அரசு ஆண்கள் பள்ளியில் மாணவா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.
ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் அரசு ஆண்கள் பள்ளியில் மாணவா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.
வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஒருவா் அலவாய்பட்டி பகுதியில் அண்மையில் நடைபெற்ற கோயில் விழாவுக்கு சென்றுள்ளாா். விழாவில், சுகாதாரத் துறையினா் முகாம் அமைத்து கோயிலுக்கு வருவோரிடம் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். இதில் பரிசோதனை செய்த மாணவருக்கு தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதே போல, ராசிபுரம், பாரதிதாசன் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் மாணவா் ஒருவருக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தொடா் காய்ச்சல் இருந்ததன் காரணமாக பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.