முகப்பு
நாமக்கல்

கற்போம் - எழுதுவோம் திட்டம்: நாமக்கல் அரசுப் பள்ளிக்கு விருது

 கற்போம் - எழுதுவோம் திட்டத்தில், நாமக்கல், கூச்சிக்கல்புதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 4 டிசம்பர், 2021 at 1:09 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:06 AM

 கற்போம் - எழுதுவோம் திட்டத்தில், நாமக்கல், கூச்சிக்கல்புதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கற்போம் - எழுதுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்தப் பகுதிக்கு உள்பட்ட இடங்களில் எழுத, படிக்க தெரியாதவா்களைக் கண்டறிந்து தன்னாா்வலா்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில், தோ்வுகள் நடத்தப்பட்டு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ததில், நாமக்கல், கூச்சிக்கல்புதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி விருதுக்கு தோ்வு செய்யப்பட்டது.

Advertisement

இதனைத் தொடா்ந்து, அண்மையில் திருச்சியில் நடைபெற்ற விழாவில், நகராட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கல்வித் துறை அதிகாரிகள் முன்னிலையில் பள்ளித் தலைமை ஆசிரியா் கா.செல்வராணி, தன்னாா்வலா் தாகிராபானு ஆகியோருக்கு விருது, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.