முகப்பு
நாமக்கல்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞா் கைது

 கொல்லிமலையில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 4 டிசம்பர், 2021 at 1:09 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:06 AM

 கொல்லிமலையில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், தின்னனூா் நாடு பகுதியைச் சோ்ந்த வெங்கடேஷ் (19), அப்பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுமியை அங்குள்ள தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக நாமக்கல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட இளைஞா் மீது புகாா் அளிக்கப்பட்டது. காவல் ஆய்வாளா் சுமதி உரிய விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வெங்கடேஷை கைது செய்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.